ஞாயிறு, 22 செப்டம்பர், 2013


கவிஞர் அபியின் -கவிதை
காலம் - புழுதி 
எங்கிலும் புழுதி 
வாழ்க்கையின் தடங்களை 
வாங்கியும் அழித்தும் 
வடிவு மாற்றியும் 
நேற்று நேற்றென நெரியும் புழுதி 
தூரத்துப் பனிமலையும் 
நெருங்கியபின் சுடுகல்லாகும் 
கடந்தாலோ 
ரத்தம் சவமாகிக் கரைந்த 
செம்புழுதி 
புழுதி அள்ளித் 
தூற்றினேன் 
கண்ணில் விழுந்து 
உறுத்தின 
நிமிஷம் நாறும் நாள்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...