| கவிஞர் அபியின் -கவிதை மாலை - தணிவு |
| காடு எரிந்த கரிக்குவியலில் |
| மேய்ந்து களைத்துத் |
| தணிந்தது வெயில் |
| என்னோடு சேர்ந்து |
| இதோ இதோ என்று |
| நீண்டு கொண்டே போன பாதைகள் |
| மடங்கிப் |
| பாலையினுள், முள்வெளி மூழ்கச் |
| சலனமற்று நுழைந்துகொண்டன |
| விவாதங்கள் |
| திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன |
| வழிகளில் |
| அறைபட்டுத் திரும்பின |
| முடிவுகள் |
| அரைகுறைப் படிமங்களாக வந்து |
| உளறி மறைந்தன |
| பசியும் நிறைவும் |
| இரண்டும் ஒன்றாகி |
| என் தணிவு |
| வேறொரு விளிம்பைச் |
| சுட்டிக் காட்டாத |
| விளிம்பில் |
| தத்தளிப்பு மறைந்த |
| என் தணிவு |
| நிகழும் போதே |
| நின்றுவிட்ட என் கணம் |
| குளிரத் தொடங்கியது |
| என் தணிவைத் தொட்டு |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக