கவிஞர் அபியின் -கவிதை கனவு-அன்று-கனவு |
| எல்லாம் முடிந்துவிட்டது எனக் |
| கடைசியாக வெளியேறிய போது |
| கவனித்தான் |
| பின்புலமற்ற |
| தூய நிலவிரிவு ஒன்று |
| அவனுக்காகக் காத்திருப்பதை |
| கனவுபோன்று இருந்தாலும் |
| கனவு அன்று அது |
| ஒளியிலிருந்து |
| இருளை நோக்கிப் |
| பாதிவழி வந்திருந்தது |
| அந்த இடம் |
| கிழக்கும் மேற்கும் |
| ஒன்றாகவே இருந்தன |
| தூரமும் கூடத் |
| தணிந்தே தெரிந்தது |
| தெரிந்ததில் |
| எப்போதாவது ஒரு மனிதமுகம் |
| தெரிந்து மறைந்தது |
| ஒரு பறவையும் கூடத் |
| தொலைவிலிருந்து தொலைவுக்குப் |
| பறந்துகொண்டிருந்தது |
| சஞ்சரிக்கலாம் |
| மறந்து மறந்து மறந்து |
| மடிவுற்றிருக்கலாம் அதில் |
| நடக்க நடக்க |
| நடையற்றிருக்கலாம் |
| ஆயினும் |
| உறக்கமும் விழிப்பும் |
| துரத்திப் பிடிப்பதை |
| அவற்றின் மடிநிறைய |
| தலைகளும் கைகால்களும் |
| பிதுங்கிக் கொண்டிருப்பதைப் |
| பார்க்கும் நிமிஷம் |
| ஒருவேளை வரலாம் |
| கனவு அன்று எனத் தோன்றினாலும் |
| கனவாகவே இருக்கலாம் |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக