ஞாயிறு, 22 செப்டம்பர், 2013


கவிஞர் அபியின் -கவிதை
காலம் - சுள்ளி 
காடு முழுதும் 
சுற்றினேன் 
பழைய 
சுள்ளிகள் கிடைத்தன 
நெருப்பிலிட்டபோது 
ஒவ்வொன்றாய்ப் 
பேசி வெடித்துப் 
பேசின 
குரலில் 
நாளைச்சுருதி 
தெரிந்தது 
அணைத்து, 
கரித்தழும்பு ஆற்றி 
நீரிலிட்டபோது 
கூசி முளைத்துக் 
கூசின இலைகள் 
தளிர் நரம்பு 
நேற்றினுள் ஓடி 
நெளிந்து மறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...