கவிஞர் அபியின் -கவிதை மாலை - காத்திருத்தல் |
| விஷப்புகை மேவிய வானம் |
| மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது |
| அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு |
| மின்னி இடித்து |
| வெறியோடு வருகின்றன |
| அல்ல அல்ல அல்ல என்று |
| பொழிந்து பிரவகிக்க |
| அழித்துத் துடைத்து எக்களிக்க |
| வருவது தெரிகிறது |
| அடர்வனங்களின் |
| குறுக்கும் நெடுக்குமாக |
| ஆவேசக் காட்டாறுகள் |
| பதறி ஓடி |
| வாழ்வைப் பயிலும் |
| உண்டு-இல்லை என்பவற்றின் மீது |
| மோதிச் சிதறி |
| அகண்டம் |
| ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது |
| O |
| காத்திருக்கிறேன் |
| இதுவே சமயமென |
| எனது வருகைக்காக |
| என் குடிசையில் வாசனை தெளித்து |
| சுற்றிலும் செடிகொடிகளின் |
| மயக்கம் தெளிவித்து |
| அகாலத்திலிருந்து |
| இந்த மாலைப்பொழுதை விடுவித்து- |
| காத்திருக்கிறேன் |
| மறுபுறங்களிலிருந்து |
| வெற்றி தோல்வியின்றித் திரும்பும் |
| என் வருகையை எதிர்நோக்கி |
| விடைகள் |
| விடைகள் |
| மிகவும் மெலிந்தவை |
| ஏதோ சுமந்து வருவன போல |
| முக்கி முனகி வியர்வை துளித்து |
| நம் முகத்தில் |
| திருப்தி தேடுபவை |
| தரையில் கால்பாவாது |
| நடக்கவும் |
| நீரில் நனையாமல் |
| நீந்தவும் |
| அறிந்தவை |
| முந்தாநாள் |
| ஒரு விடையை |
| எதிர்ப்பட்டேன் |
| என்னைப் பார்த்தவுடன் |
| அது |
| உடையணிந்து |
| உருவுகொண்டது |
| தன்னை ஒருமுறை |
| சரிபார்த்துக் கொண்டதும் |
| எங்களைச் சுற்றி |
| ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு |
| என்னை நேர்கொண்டது |
| நான் |
| ஒன்றும் சொல்லவில்லை |
| நெளிந்தது |
| கலைந்து மங்கும்தன் |
| உருவை |
| ஒருமித்துக் கொள்ளக் |
| கவலையோடு முயன்றது |
| சுற்றிலும் பார்த்துவிட்டு |
| ஒருமுறை |
| என்னைத் தொடமுயன்றது |
| நான் |
| எதுவுமறியாத |
| பாவனை காட்டியதில் |
| ஆறுதலுற்றுக் |
| கொஞ்சம் நிமிர்ந்தது |
| எதிர்பாராது வீசிய காற்றில் |
| இருவரும் |
| வேறுவேறு திசைகளில் |
| வீசப்பட்டோம் |
| திரும்பப்போய்த் |
| தேடிப்பார்த்த போது |
| சாமந்திப்பூ இதழ்கள் போல் |
| பிய்ந்து கிடந்தன |
| சில |
| சாகசங்கள் மட்டும் |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக