கவிஞர் அபியின் -கவிதை மாலை - எது |
| தூசி படிந்த புளியமர வரிசையை |
| வைதுகொண்டே |
| மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள் |
| வண்டுகளும் பறவைகளும் |
| தோப்புகளுக்குள் |
| இரைச்சலைக் கிளறி |
| எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன |
| இருண்டு நெருங்கி வளைக்கும் |
| மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் |
| இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித் |
| ததும்புகிறது |
| என் வலி |
| பொழுது நிரம்புகிறது |
| ஒரு இடுக்கு விடாமல் |
| O |
| தூசி படிந்த இரைச்சலுக்கடியில் |
| சாத்வீக கனத்துடன் |
| இது எது? |
| இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில் |
| இடறாத என் பாதங்களினடியில் |
| இது எது |
| என் சாரங்களின் திரட்சியுடன் |
| வலியுடன் |
| அலங்கரித்த விநோதங்களை |
| அகற்றிவிட்டு |
| எளிய பிரமைகளின் வழியே |
| என்னைச் செலுத்தும் |
| இது எது? |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக