நினைவின்மை 2
புதருக்கு
நெருப்பு வைத்து
ஒதுங்கிக் கொண்டேன்
நெருப்பைத் தன்
வேரில் கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்.
வெட்டிச் சாய்ப்போமென
முயன்ற போது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது
நடுவே அமர்ந்து
மண்ம்லூடி நான்
வெட்ட வெளியைச்
சுற்றிலும் விரித்துக்கொள்ள, என்
புற இமை தடவி
அனுதாபமாய்க் கவனித்தது
புதர்
பேசாமலிருந்து விட்டேன்
பெருந்தன்மையாய்
நெருப்பு வைத்து
ஒதுங்கிக் கொண்டேன்
நெருப்பைத் தன்
வேரில் கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்.
வெட்டிச் சாய்ப்போமென
முயன்ற போது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது
நடுவே அமர்ந்து
மண்ம்லூடி நான்
வெட்ட வெளியைச்
சுற்றிலும் விரித்துக்கொள்ள, என்
புற இமை தடவி
அனுதாபமாய்க் கவனித்தது
புதர்
பேசாமலிருந்து விட்டேன்
பெருந்தன்மையாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக