இமை
செத்துப்போனது போலிருந்த
இமை
மெல்ல
மெல்ல
உயிர்த்து, மேலிருந்து
அசயப் பார்க்கிறது
வறட்சி
பார்வையில்
சூரியப் பொருக்கு உதிர்ந்து
வலியில் ஊறிக்
குவியல் சுற்றிலும்
கயிரு தின்று மிஞ்சிய
முளைகள்
உமிழ்நீரில்
மீண்டும் தளிர்க்க
வெறிகொள்கின்றன
வர்ணங்கள்
பற்றிக் கொண்டு
வெறும் கரும்புகையுடன்
எரிகின்றன
மூலை இருள் தோறும்
சலனங்கள் சந்தித்து
அவசரமாய்ப்
பேசிப்பிரியும்
நினைவுகள்
ஏதோ ஒளிவலைப்பட்டு
ரத்தமும் வேர்வையுமாய்க்
கண்ணில் பரபரத்தவை,
இன்று, கண்சலிக்கவும்,
தம்மைச் சந்தேகித்து
புறம் பிளந்து புரண்டு சுழன்று
அகம் வெளியாய்ப் புறம் உள்ளாய்
ஆகியும்
எதும் புரியாது, தம்
மையத்துள்
சருகி ஒடுங்குகின்றன
இமை
மெல்ல
மெல்ல
உயிர்த்து, மேலிருந்து
அசயப் பார்க்கிறது
வறட்சி
பார்வையில்
சூரியப் பொருக்கு உதிர்ந்து
வலியில் ஊறிக்
குவியல் சுற்றிலும்
கயிரு தின்று மிஞ்சிய
முளைகள்
உமிழ்நீரில்
மீண்டும் தளிர்க்க
வெறிகொள்கின்றன
வர்ணங்கள்
பற்றிக் கொண்டு
வெறும் கரும்புகையுடன்
எரிகின்றன
மூலை இருள் தோறும்
சலனங்கள் சந்தித்து
அவசரமாய்ப்
பேசிப்பிரியும்
நினைவுகள்
ஏதோ ஒளிவலைப்பட்டு
ரத்தமும் வேர்வையுமாய்க்
கண்ணில் பரபரத்தவை,
இன்று, கண்சலிக்கவும்,
தம்மைச் சந்தேகித்து
புறம் பிளந்து புரண்டு சுழன்று
அகம் வெளியாய்ப் புறம் உள்ளாய்
ஆகியும்
எதும் புரியாது, தம்
மையத்துள்
சருகி ஒடுங்குகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக