ஞாயிறு, 22 மார்ச், 2015

ஏற்பாடு


நமக்குள்
ஒரு ஏற்பாடு

நான் நிகழ்கிறவன் இல்லை
என்பதால்
நிழலும் சுவடுமற்று
நின்றிருப்பேன்

நீ அபரிமித இயக்கத்தில்
கடையப்பட்டு
வேகத்தின் பூரணம் நிச்சலனம்
எனக் கண்டு
அதேபோல் நின்றிருப்பாய்

பாவனைகளில்
மிகமூத்த
நான் என்ற பாவனையை
மெல்ல முகர்ந்து
விரல் நுனியால்
தொட்டுப் பார்த்துக் கொண்டு
நான்

நான் என்ற பாவனைக்குள்
செறிவாய் நுழைந்து திணிந்து
பார்த்தலும் பார்க்கப் படுதலும் இல்லாமல்
நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...