ஞாயிறு, 22 மார்ச், 2015

மருந்து 


அசட்டு ஒளி
பிஞ்சில் வெம்பிய தன் நிறங்களைப்
பிதுக்கிப் பார்த்துச்
சிரித்திருந்தது

மண்ணில் மூழ்குதல்
உறிஞ்சு பாறைகளிடை
உரமிழத்தலே
என்று
வாடிக்கையாயிற்று

நின்ற இடத்தில்
நிண்டு கொண்டே
ஒயாத பயணம்
அபத்த மென்பதில்
சிரிப்பும் மூண்டது

பின்
சட்டென்று ஒருநாள்
என்னையறியாமலே
இதனிடம் ஒப்புவித்தேன்
என்னை

இளம் சூடு

கண்முன்
தொனிகளின்
மயக்கு வடிவங்கள்

சுற்றிலும்
நூறுவருஷ நீளத்துக்கு
இதன்
ஷ்பரிச சுகத்தில்
அரூபமுற்ற
சுருதி

மூச்சடக்கி ஸ்தம்பித்த
வினாடி நுனியில்
திசையற்று நீண்ட கரங்களில்
நான்

புலன் பூட்டுடைத்து
மிருது மூர்க்கமாய்
உள்நுழைந்து
உருவம் உருவிச்
சுருட்டி எறிந்துவிட்டு

என்னைத்
தன் மேலொரு
படலமாக்கிப்
படர்ந்திற்று
மெளனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...