யுரேகா
கள்ளிக்காடு
கட்டெறும்புகளின் அணிவகுப்பின் முன்
விறைத்து நின்றேன்.
முறைத்தாய்
ஊர்க்குளம்.
பாசிவிலக்கி
நீரில்
என் முகம் கிடைத்த
பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்
சுளித்தாய்
தரையும் சுவருமற்று வீடு
உள்ளே
காற்றில் திணிந்த்திருந்த
குரல் சேகரித்து
நாவில் தடவிப் பாடினேன்;
வாயருகே வந்து
பிணவாடை கண்டாலெனத்
துணுக்குற்றாய்
அன்றைக்கு
எல்லம் துறந்து
ஆன்ம பரிசோதனைக்காக
அமர்ந்த தியானத்தில்
என் முதுகைக் குத்திற்று
உன்கண்.
யுரேகா சொல்லித்
தட்டுத் தடுமாறி
ஒடிய போது
கைகொட்டிக் கைகொட்டிச்
சிரித்தாய்
யார் நீ
கட்டெறும்புகளின் அணிவகுப்பின் முன்
விறைத்து நின்றேன்.
முறைத்தாய்
ஊர்க்குளம்.
பாசிவிலக்கி
நீரில்
என் முகம் கிடைத்த
பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்
சுளித்தாய்
தரையும் சுவருமற்று வீடு
உள்ளே
காற்றில் திணிந்த்திருந்த
குரல் சேகரித்து
நாவில் தடவிப் பாடினேன்;
வாயருகே வந்து
பிணவாடை கண்டாலெனத்
துணுக்குற்றாய்
அன்றைக்கு
எல்லம் துறந்து
ஆன்ம பரிசோதனைக்காக
அமர்ந்த தியானத்தில்
என் முதுகைக் குத்திற்று
உன்கண்.
யுரேகா சொல்லித்
தட்டுத் தடுமாறி
ஒடிய போது
கைகொட்டிக் கைகொட்டிச்
சிரித்தாய்
யார் நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக