திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- பிணம்போல்

வெளியில் போய்ப்
புழுதிவிசாரித்துத்
திரும்புவதற்குள்
எல்லா மாலைகளும்
--என்னுடையது தவிர --
கூடிவிட்டன

அசைவுகளை அதட்டி
இன்னது இன்னவைகளின் விளையாட்டை
ஊதி நிறுத்திக்
கூடிவிட்டன

தலைதலையாகத்
தடவித் துயிற்றும்
இருளை ஆடி

யோசனை அமிழ்ந்து மறியும்
பிரவாக அமைதியில்
மூச்சை அடக்கிக் --
கூடிவிட்டன

அடிவான் விளிம்பில்
பறவைக் கூச்சல் மொய்த்துப்
பிணம்போல் --
என்மாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...