கவிதை படிக்கும் போது
குரல்
தெளிவாக
திருத்தங்கள் தேவையற்று
இருக்குமாம்
சிமிட்டலின் மின்னொளி பட்டு
உலகம் பிளந்து
உள்ளே தெரியுமாம்
எதையோ தொட்டுவிட்டதான
திருப்தியில்
விரல்களைப் புதிதாக
நேசிக்கத் தோன்றுமாம்
இதயத்தச் சுற்றி
இளஞ்சூட்டில்
காற்று நிரம்பும்;
த்வனிகளைக்
கண்டடைந்து விட்டதால்
பத்ற்றம் தணியும் ...
சொல்கிறார்கள்
மெலும்
அருகில் எங்கோ இருந்துகொண்டு
தர்க்கம் கவனித்தவாறு இருக்குமாம்,
கவிதை படிக்கும் போது
சொல்கிறார்கள்
தெளிவாக
திருத்தங்கள் தேவையற்று
இருக்குமாம்
சிமிட்டலின் மின்னொளி பட்டு
உலகம் பிளந்து
உள்ளே தெரியுமாம்
எதையோ தொட்டுவிட்டதான
திருப்தியில்
விரல்களைப் புதிதாக
நேசிக்கத் தோன்றுமாம்
இதயத்தச் சுற்றி
இளஞ்சூட்டில்
காற்று நிரம்பும்;
த்வனிகளைக்
கண்டடைந்து விட்டதால்
பத்ற்றம் தணியும் ...
சொல்கிறார்கள்
மெலும்
அருகில் எங்கோ இருந்துகொண்டு
தர்க்கம் கவனித்தவாறு இருக்குமாம்,
கவிதை படிக்கும் போது
சொல்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக