தோல்வி
தோல்விக்குப் பின் வந்த நாட்கள்
கலவரப் படாமல் கடக்கின்றன
அலையடங்கிய நீர்ப்பெருக்கின்
மேலாக
மெல்ல நடந்து செல்வதில் சுகம்
பழக்கமில்லாத தாவரங்களுடன்
ஜீவராசிகளுடன்
வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன்
தனியே விடப்பட்டிருப்பதில்
ஆறுதல்
வாசனை எதுவும் இல்லை
சுவாசம் சிணுங்காமல் போய் வருகிறது
சாம்பல் நிறம் மட்டும்
மெருகேறியிருக்கிறது
வேறு நிறங்கள் இல்லை
மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது
இந்தத் தருணங்களின்
விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு
பார்ப்பவைகளுடன்
பார்க்க முடியாதவைகள்
பிரித்துணர முடியாதவை
ஆகிவிட்டன
கலவரப் படாமல் கடக்கின்றன
அலையடங்கிய நீர்ப்பெருக்கின்
மேலாக
மெல்ல நடந்து செல்வதில் சுகம்
பழக்கமில்லாத தாவரங்களுடன்
ஜீவராசிகளுடன்
வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன்
தனியே விடப்பட்டிருப்பதில்
ஆறுதல்
வாசனை எதுவும் இல்லை
சுவாசம் சிணுங்காமல் போய் வருகிறது
சாம்பல் நிறம் மட்டும்
மெருகேறியிருக்கிறது
வேறு நிறங்கள் இல்லை
மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது
இந்தத் தருணங்களின்
விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு
பார்ப்பவைகளுடன்
பார்க்க முடியாதவைகள்
பிரித்துணர முடியாதவை
ஆகிவிட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக