திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- பயில

கிடை வரிசையில்
நிழல்கள் நீண்டு நெளிந்து
தடமின்றிப் புதைந்துவிடும்

இப்போது அவை
வேறு மொழியில்
வேறு தரைகளில்
அமிழ்ந்திருக்கும்

கரையோரத் தென்னைகளுடன்
நட்பு எளிமை துறந்து
ஆறு
தன் அன்னியம் கொண்டு இருளும்
திசைனினைவு
விடுபட்டு ஒடுங்கி
எது இறுதியோ அதைத்
தொட முடியாதெனத் துக்கித்துத்
துழாவிப் போகும்
0-0

உருவினுள் மறைந்து
உருவிழந்த
மாலையைப்
பயின்றுகொண்டிருபேன்

மணல் பிசைந்து
மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில --
அரவமற்ற
என் மூலைகளினுள்
உரிஞ்சப்படுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...