திங்கள், 6 ஏப்ரல், 2015

சுற்றி

செறிவூட்டியபடி
உன்னை நான் சுற்றிவருகிறேன்

இன்றுபோல் இல்லாமல்
இன்னொரு நாள்போல் இல்லாமல்

எங்கோ போய்க்கொண்டிருக்கும்
வெட்டவெளி
நின்று வேடிக்கை பார்க்க
உன்னை நான்
சுற்றி வருகிரேன்

உன்னைச் சுற்றி
வட்டங்கள் உருவானபின்
விலகிக் கொள்கிறேன்

இனி
வட்டங்கள்
செறிவூட்டியபடி
உன்னை சுற்றிவரும்

உன்னைச் சுற்றி
உன் செறிவு உருவானபின்
வட்டங்கள் விலகிக் கொள்ளும்

பின்
உன் செறிவு
செறிவூட்டியபடி
உன்னைச் சுற்றிவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...